For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தர்கண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 விநாடிகள் நடுங்கிய வட இந்தியா

டெல்லியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இது உணரப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்கள் பலவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ரிக்டராக பதிவானது.

டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. குர்கான், நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். இது 30 விநாடிகள் அளவுக்கு இருந்தது.

Quake of 5.6 Richter strikes Uttarkhand, North India jolts

உத்தர்கண்ட் மாநிலத்தில்தான் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. தலைநகர் டேராடூனுக்கு அருகே ருத்ரபிரயாக் பகுதிக்கு அருகே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இரவு சரியாக 10.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெல்லி முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தர்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பூமிக்குக் கீழே 14.2 கிலோமீட்டர் ஆழத்திற்குள் பூகம்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் டிவீட் போட்டிருந்தார். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக அவர் அதில் கூறியிருந்தார்.

English summary
Epicentre of earthquake measuring 5.8 magnitude on Richter Scale was in Rudraprayag of Uttarakhand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X