லடாக்கில், லேவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு....கட்டிடங்கள் சேதம்!!
லே: லடாக் பகுதியில் இன்று மதியம் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வுக்கான தேசிய மையம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. லே பகுதியில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.
லே பகுதியில் இருந்து 129 கி. மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி. மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் தங்களது வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருந்ததாக லே பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், எந்தவிதத்திலும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நடப்பு வாரத்தில் இரண்டாவது நிலநடுக்கம் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.
தொடர்ந்து வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மிசோராம் பகுதியில் 4.6 ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அதற்கு முந்தைய வெள்ளி கிழமைதான் மிசோரம் மாநிலத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. எந்த வகையிலும் சேதாரங்கள் ஏற்படவில்லை.
பீகார் சட்டசபை தேர்தலில் 16.6 லட்சம்... இடம் பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கலாம்!!