For Quick Alerts
For Daily Alerts
Just In
ராணுவ தளபதி நியமனம்..மத்திய அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது தேர்தல் ஆணையம்
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தளபதியை மத்திய அரசு நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.
தற்போதைய ராணுவ தளபதி பிக்ரம் சிங் ஜூலை 31ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். இதைத் தொடர்ந்து புதிய ராணுவ தளபதியை நியமிக்க அனுமதி கேட்டு மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தும் பாஜகவினர் முறையிட்டனர்.
இதையடுத்து புதிய ராணுவ தளபதியை நியமிக்க தற்போதைய மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காது என்றே கூறப்படுகிறது. அடுத்து வரும் அரசுதான் ராணுவ தளபதியை நியமிக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
lok sabha election 2014 centre army chief election commission லோக்சபா தேர்தல் 2014 மத்திய அரசு ராணுவ தளபதி தேர்தல் ஆணையம்
English summary
The Election Commission is likely to ask the government to defer the appointment of the next Army chief until after the Lok Sabha polls.
Story first published: Saturday, May 3, 2014, 12:55 [IST]