For Quick Alerts
For Daily Alerts
Just In
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது - அருண் ஜெட்லி
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2016 -17ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- 2016 - 17ம் ஆண்டில், மொத்த உற்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- 2017- 18 ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.75% - 7.50 % ஆக இருக்கும். தொழிலாளர் மற்றும் வரிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
- 2018 நிதியாண்டில், ஜிடிபியில், சுங்கம் தொடர்பான வரிகள் 0.1 சதவீதம் குறைவாக இருக்கும்
- பணமதிப்பு நீக்கம் அறிவிப்பிற்குப் பிறகு பொருளாதாரம் சீரடைய கொள்கை அளவில் ஆதரவு அவசியம்.
- 2016-17ஆம் நிதி ஆண்டில் தொழில் துறை வளர்ச்சி 5.2%ஆக இருக்கும். கடந்த நிதி ஆண்டை விட 2.2% வீழ்ச்சி
- உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா தக்க வைக்கும்
- பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யின் பலன்களை உடனே எதிர்பார்க்க முடியாது
- விவசாயத்துறை 4.1% வளர்ச்சி காணும்
Comments
budget 2017 economic survey parliament growth rate arun jaitley பட்ஜெட் 2017 பொருளாதார ஆய்வறிக்கை அருண் ஜெட்லி நாடாளுமன்றம்
English summary
The Survey said that agriculture sector will grow at 4.1 per cent for 2016-17, and industrial sector at 5.2 per cent.
Story first published: Tuesday, January 31, 2017, 13:48 [IST]