கார்த்தி சிதம்பரம் தொடர்புள்ள வழக்கில் இந்திராணி முகர்ஜியை விசாரிக்கிறது அமலாக்கத்துறை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் இந்திராணி முகர்ஜியை விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இயக்குநர் இந்திராணி தற்போது வழக்கு ஒன்றில் சிக்கி சிறையிலுள்ளார். இந்திராணியின் ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக நடத்தும் நிறுவனம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அன்னிய முதலீட்டுக்கு அங்கீகாரம் அளித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்திராணியிடம் விசாரிக்க அமலாக்கத்துறை முயன்றது. இதற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீதான லுக்அவுட் நோட்டீசுக்கு தடை விதித்த சென்னை ஹைகோர்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும்வரை கார்த்தி வெளிநாடு செல்ல முடியாது என கோர்ட் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.