சட்டசபையில் ஜெ. படத்தை திறந்து வைக்க பிரதமரை அழைத்தேன்.. எடப்பாடி பழனிச்சாமி!
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தாக பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றார்.
மேலும் தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதால் அதிலும் பங்கேற்குமாறும் அவர் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.