பெங்களூரில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின்பறிப்பு சம்பவங்கள்: பீதியில் பெண்கள்
பெங்களூர்: பெங்களூரில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஐ.டி. நகரமான பெங்களூரில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றது. சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரில் ஒரே நாளில் 8 பேரின் செயின்கள் பறிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள மைக்கோ லே அவுட், மாருதி நகர், ஏலஹங்கா, ஜே.பி. நகர், அம்ருதஹள்ளி ஆகிய இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
அதில் ஒரு இடத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவின் விபரம்,
பைக்கில் இரண்டு பேர் வருகின்றனர். அதில் ஒருவர் பைக்கில் இருந்து இறங்கிச் சென்று சாலையோரம் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பியோடுகிறார். செயினை பறிக்கையில் அந்த பெண் நிலைதடுமாறி சாலையில் விழுகிறார். இந்த சம்பவம் நடந்தபோது அந்த பகுதியில் வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.