For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுவராஜ் சிங் வீட்டு கேட் கழன்று விழுந்து 8 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

By Siva
Google Oneindia Tamil News

சன்டிகர்: ஹரியானாவில் உள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டின் கேட் கழன்று விழுந்ததில் 8 வயது சிறுவன் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு வீடு உள்ளது. அந்த வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் புதுப்பிக்கும் பணயில் ஈடுபட்டிருந்த கட்டிடக் கூலித் தொழிலாளியின் மகன் குல்தீப்(8) கடந்த 19ம் தேதி அங்கு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

Eight-year-old child dies at Yuvraj Singh’s Panchkula residence

குல்தீப் வீட்டின் கேட்டில் ஏறி விளையாடியுள்ளார். அப்போது எடை அதிகம் உள்ள கேட் கழன்று சிறுவன் மீது விழுந்ததில் அவர் உடல் நசுங்கி பலியானார். முன்னதாக கேட் விழுந்ததும் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கட்டிட வேலை நடந்து கொண்டிருப்பதால் கேட் ஒழுங்காக பொருத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர். சம்பவம் நடந்தபோது யுவராஜும், அவரது தாயும் வீட்டில் இல்லை.

யுவியும், அவரது தாயும் குருகிராமில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார்கள். சம்பவம் நடந்த வீடு யுவின் தாய் சப்னம் சிங்கின் பெயரில் உள்ளது.

English summary
A 8-year old boy was crushed to death after the gate of cricketer Yuvraj Singh's Panchkula residence fell on him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X