ஓடு.. ஓடு.. தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை வெறித்தனமாக விரட்டிய யானை! வீடியோ
உத்தரகாண்ட் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை யானை ஒன்று ஓட ஓட விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
ராம்நகர்: உத்தரகாண்ட் தேசிய பூங்காவில் யானை சுற்றுலாப் பயணிகளை ஓட ஓட விரட்டியுள்ளது. மரணபயத்துடன் திறந்த ஜீப்பில் சுற்றுலாப் பயணிகள் ஓட்டம் பிடிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான சிறுத்தைகளும் யானைகளும் மற்றும் பல விதமான பறவைகளும் உள்ளன.
இந்த வனப்பகுதியை பார்வையிட ஜீப் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
#WATCH: Elephant chases tourists at Jim Corbett National Park in Uttarakhand's Ramnagar. pic.twitter.com/JdtTcfOC6h
— ANI (@ANI_news) May 27, 2017
இந்நிலையில் வனப்பகுதிக்குள் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப் ஒன்றை யானை ஒன்று வெறித்தனமாக விரட்டியது. இதனால் பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள் உயிர் பிழைத்தால் போதும் என ஜீப்புடன் ஓட்டம் பிடித்தனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு மரண பயத்தை காட்டி அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.