ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் ஃபிஎப் வசதி கட்டாயம் .. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம்(ஃபிஎப்) பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான "பவன் ஹன்ஸ் லிமிடெட்" நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 270 ஒப்பந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பபடவில்லை. இதை எதிர்த்து தொழிலாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றம்த்தல் வழக்கு தொடரப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு நிறுவனம் தங்களிடம் பணியாற்றுபவர்களை நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என வேறுபடுத்தி பார்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழ் சாதாரண தொழிலார்களின் சமூக பாதுகாப்பு பலன்கள் உறுதி செய்யப்படுவதாக நீதிபதிகள் கூறினர்.
பூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு
270 ஒப்பந்த பணியாளர்களுக்கும் 2017 ஜனவரி மாதம் முதல் 2019 டிசம்பர் மாதம் வரை வருங்கால வைப்பு நிதி பலன்களை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.