காஷ்மீரின் அக்னூரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.. 2 இந்திய வீரர்கள் பலி
காஷ்மீர் மாநிலம் அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் அக்னூரில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்த தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதல்கள் காரணமாக பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து இன்று காலை அக்னூரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதிகாலை யாரும் எதிர்பார்க்காத வேளையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இருநாட்டு ராணுவத்துக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது.
இந்த தாக்குதலில் தீவிரவாதி இந்திய ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் விவரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.