சத்தீஸ்கரில் நக்கசலைட்டுகள் 2 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்டர்-கெரினர் வனப்பகுதியில், நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை அறிந்து கொண்ட பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்சிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் தங்கள் தரப்பில் இருந்து எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில், பெண்கள் உட்பட 2 நக்ஸ்லைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 1 உயர் ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.