முடிவிற்கு வருகிறது நீதிபதி ஜோசப் நியமன சர்ச்சை.. கொலீஜியம் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு!
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.
Recommended Video
டெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு இதை ஏற்கவில்லை.
இரண்டு மாதம் முன் உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு அனுப்பிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம்.
ஆனால் அப்போது உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் பெயரை மட்டும் பரிந்துரையில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அவரது பெயர் மூப்பின் அடிப்படையில் இப்போது வர கூடாது என்று கூறியுள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து விவாதம் நடத்த இரண்டு முறை கொலீஜியம் கூடி உள்ளது. கொலீஜியத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் கூடி, ஜோசப் நியமனம் குறித்து விவாதித்தார்கள். மத்திய அரசிடம் இரண்டு முறை அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் மத்திய அரசு அவர் பெயரை வேண்டுமென்றே ஏற்கவில்லை. இந்தநிலையில் மூன்றாவது முறையாக அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருக்கிறது.
இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா ஹைகோர்ட் தலைமை நீதிபதி வினித் சரண் ஆகியோருடன் இவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.