For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலையை எதிர்த்து அமலாக்கத் துறை மேல்முறையீடு

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலையை எதிர்த்து அமலாக்கத் துறை மேல் முறையீடு செய்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலையை எதிர்த்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

Enforcement Directorate appeals against 2G scam judgement

சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 2ஜி வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பளித்தார்.

சிபிஐ தரப்பில் எந்த ஒரு ஆதாரத்தையும் தாக்கல் செய்ய வில்லை என்ற விஷயத்தையும் அவர் முன்வைத்து குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவித்தார். ஆதாரத்துக்காக தாம் 6 மாதங்கள் வரை காத்திருந்ததாகவும் நீதிபதி நகைச்சுவையாக தெரிவித்தார்.

இந்நிலையில் 2ஜி வழக்கில் கனிமொழி , ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளனர். அதுபோல் சிபிஐயும் மேல்முறையீடு மனு செய்யவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

English summary
Enforcement Directorate appeals against acquittance of A.Raja and Kanimozhi in the 2G scam spectrum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X