For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது.. தனித்து தீர்ப்பு கூறிய பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா!

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    4 ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு பச்சைக்கொடி..பெண் நீதிபதி எதிர்ப்பு!- வீடியோ

    டெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்துள்ளார். ஐந்து நீதிபதிகளில் அவர் தனி தீர்ப்பளித்துள்ளார்.

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

    Entry of Women into Sabarimala: Justice Indu Malhotra gave separate verdict

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகளில் 4 பேர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

    [சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி.. தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை.. கேரள அரசு அறிவிப்பு ]

    4:1 என்ற கணக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நீதிபதி இந்து மல்ஹோத்ரா சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    அவர் தனது தீர்ப்பில், இது மத நம்பிக்கை சார்ந்தது. இதில் பல உள்ளார்ந்த மத நம்பிக்கைகளை ஆராய வேண்டும். பெண்களுக்கு கோவிலில் வழிபட, இந்து மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது.

    ஆனால் சபரிமலை கோவில் விவகாரம் என்பது இந்து மத நம்பிக்கை தொடர்பானது. இதற்கும் பெண் வழிபாட்டு முறைக்கும் தொடர்பில்லை. குறிப்பிட்ட வயது பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே சரியானது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

    ஆனால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர் ஆகிய நான்கு பேர் பெண்களை அனுமதிக்கும்படி தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும்.

    English summary
    Entry of Women into Sabarimala: Justice Indu Malhotra gave separate verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X