ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு காட்டிக்கொடுத்த இந்திய மாஜி விமானப்படை அதிகாரி கைது
டெல்லி: பாகிஸ்தானுக்காக ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரியான ரஞ்சித் என்பவரை டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கைதான ரஞ்சித், ஐஎஸ்ஐ அமைப்புடன், இ-மெயில், வாட்ஸ்அப் அழைப்புகள், ஸ்கைப் அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்தியாவின் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடங்கள், படைத்தளங்கள் குறித்த ராணுவ தகவல்களை ரஞ்சித், பாகிஸ்தானிடம் கசியவிட்டுள்ளார். இதற்காக பணம் பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தீவிரமான வகையில், இந்தியாவை உளவு பார்க்கத் தொடங்கியுள்ளது. இதை முன்கூட்டியே கண்டறிந்த இந்திய உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, காவல்துறை இணைந்து, கடந்த சில மாதங்களில் பல முன்னாள் ராணுவ வீரர்களை இக்குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாஜி அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், டெல்லி காவல்துறை பஞ்சாப்பை சேர்ந்த