கோவாவில் எய்ட்ஸ் நோயாளி இல்லாத கிராமமே இல்லை... சுகாதாரத்துறை அமைச்சர்
பனாஜி: கோவாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லஷ்மிகாந்த் பர்சேகர் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபையில், இன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நிலேஷ் கேப்ரல் எச்.ஐ.வி. நோய் குறித்து எழுப்பிய கேள்விக்கு, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லஷ்மிகாந்த் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
எச்.ஐ.வி பாதிப்பு...
மாநிலத்தில் 15000 மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் ஆகும்.
கிராமங்களில்...
எச்.ஐ.வி.யால் பாதிக்காதவர்கள் இல்லாத கிராமங்களே நமது மாநிலத்தில் இல்லை.
ஒப்பீடு...
எனினும் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பாதியாகக் குறைந்தது...
2003 லிருந்து 2008 வரை ஆண்டொன்றுக்கு 1000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 2009க்குப் பிறகு ஆண்டொன்றுக்கு 550 பேர் தான் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.