ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற்று ''கம்-பேக்'' கொடுக்கும்.. டைம்ஸ் நவ் கணிப்பு!
ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தற்போது முடிந்துள்ளது. சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இன்றுதான் தெலுங்கானா, ராஜஸ்தான் தேர்தல் நடந்தது.
தேர்தல் முடிந்த காரணத்தால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளது. தற்போது டைம்ஸ் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 101 தொகுதிகள் தேவை.
ராஜஸ்தானில் காங்கிரஸ் 105 தொகுதிகளை வெல்லும். பாஜக 85 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும். பகுஜன் சமாஜ் 2, பிறர் 7 தொகுதிகளை வெல்வார்கள் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு கடந்த ஐந்து வருடமாக ஆண்ட பாஜக ஆட்சி முடிவிற்கு வரும் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.