சட்டீஸ்கரில் பாஜகவின் சாம்ராஜ்ஜியத்தை காங்கிரஸ் அகற்றும்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்சிட் போல்!
சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்சிட் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்சிட் போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சீட் நுனியில் வைத்திருந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தற்போது முடிந்துள்ளது. மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.
தேர்தல் முடிந்த காரணத்தால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. தற்போது இந்தியா டுடே, ஆக்சிஸ் எக்சிட் போல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். சட்டீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. சட்டீஸ்கரில் பெரும்பான்மைக்கு தேவை 46 தொகுதிகள்.
கருத்து கணிப்பின்படி சட்டிஸ்கரில் 55-65 தொகுதிகளை காங்கிரஸ் வெல்லும். பாஜக 21-31 தொகுதிகளை வெல்லும். பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 4-8 தொகுதிகளை வெல்லும்.
சட்டீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான 15 வருட பாஜக ஆட்சியை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே, ஆக்சிஸ் எக்சிட் போலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.