For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு மாஸ் வெற்றி.. காங்கிரசுக்கு படுதோல்வி.. டைம்ஸ் நவ் கணிப்பை பாருங்க!

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி 230 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி 230 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. இதில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மகாராஷ்டிரா தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது.

Exit Poll 2019: BJP and Shiv Sena will get a huge majority in Maharashtra says Times Now

தேர்தல் முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா ஆட்சியில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகள் உள்ளது.

பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலையும் சந்திக்கிறது. அதேபோல் இன்னொருபுறம் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது.

தற்போது மகாராஷ்டிர தேர்தல் குறித்து, டைம்ஸ் நவ் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 230 இடங்களில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றிபெற்று அமோகமாக ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு 48 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு 10 தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

English summary
Exit Poll 2019: BJP and Shiv Sena will get a huge majority in Maharashtra says Times Now poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X