சஞ்சய் தத் பரோல் நீட்டிப்பில் அரசியலோ, விதிமீறலோ இல்லை: மஹா. முதல்வர் விளக்கம்
மும்பை: மனைவியின் உடல்நிலையைக் காரணமாக இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப் பட்டுள்ள பரோல் நீட்டிப்பில் எந்த ஒரு விதிமுறை மீறலும் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளார் மஹாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார் இந்தி நடிகர் சஞ்சய் தத். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
அதனைத் தொடர்ந்து புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார் சஞ்சய் தத். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.
பின்னர், மீண்டும் தனது மனைவி மான்யதாவின் உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த டிசம்பரில் பரோலில் வந்தார். தற்போது அந்த பரோல் இரண்டாவது தடவையாக நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிலளித்துள்ளார் அம்மாநில முதல்வர்.