6 சீன பல்புகள் வெடித்து 400 பேருக்கு கண்பார்வை போன பரிதாபம் சத்தீஷ்கரில் !
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 சீன பல்புகள் வெடித்துச் சிதறியதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 400 பேருக்கு கண்பார்வை பாதிப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்தந்தன்கயான் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. அங்கு அலங்காரத்திற்காக சீன பல்புகள் கட்டப்பட்டிருந்தன. இதில் 6 பல்புகள் திடீரென வெடித்து சிதறியது. சிதறிய பல்புகளின் துகள்கள் கண்களில் பட்டதால் குழந்தைகள், பெண்கள் உள்பட 400 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பாலோடு மாவட்டத்தில் அண்மையில் நடந்த விழாவில் சீன பல்புகள் வெடித்துச் சிதறியதில் 800 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.