ஏடிஎம்மில் பணம் எடுக்க கியூவில் நின்று பலியானவரின் குடும்பம் நிவாரணம் கோரி வழக்கு
டெல்லியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பலியான முதியவரின் குடும்பத்தினர் ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டுள்ளனர்.
டெல்லி: டெல்லியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக 3 நாள் கியூவில் காத்திருந்து அதனால் ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் மரணமடைந்த முதியவரின் குடும்பத்தினர், மத்திய அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அந்த முதியவரின் பெயர் சியாராம். 70 வயதான அவர் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தாராம். நவம்பர் 17ம் தேதி அவர் ஒரு ஏடிஎம் மையத்தின் முன்பு வரிசையில் காத்திருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த கன்ஹயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் சியாராம் 3 நாட்களாக பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு வந்து காத்துக் கிடந்தால். அதில் அவரது மூளையில் ரத்தம் உறைந்து போய் உயிரிழந்து விட்டார்.
தலைநகரில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மெஷின்களில் பணம் வருவதில்லை. மத்திய அரசின் அலட்சியத்தால்தான் சியாராம் மரணமடைந்தார். எனவே மத்திய அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார் கன்ஹாயா.