10 லட்சம் பேர் வெளியேற்றம்.. 220 கிமீ வேகம்.. 43 வருடத்தில் வீசாத அசுர புயலாக மாறியது ஃபனி!
Recommended Video
ஒடிசா: ஒடிசாவில் வீசி வரும் ஃபனி புயல் இந்தியாவில் கடந்த 43 வருடங்களில் வீசியதிலேயே மிக கடுமையான வலுவான புயலாக மாறி இருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த வாரம் புயலாக மாறியது. ஃபனி புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறி உள்ளது.
இதனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை. தற்போது இந்த புயல் ஒடிசாவை தாக்க தொடங்கி உள்ளது. இது மிக வலுவான புயலாக உருவெடுத்துள்ளது.
174 கி.மீ. வேகத்தில் ஃபானி புயல்... ஆந்திரா துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
|
எவ்வளவு வேகம்
இந்த புயல் இவ்வளவு வேகத்தில் வீசும் என்று யாரும் நினைக்கவில்லை. இந்த புயல் நொடிக்கு நொடி வலுவடைந்து கொண்டே செல்கிறது. தற்போது இந்த புயல் 100 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இனிதான் கரையை கடக்கும் முன் இது முழு வேகம் அடையும். அப்போது 220 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
|
எங்கு கரையை கடக்கும்
ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது. காலை 8 மணிக்கு இந்த புயல் கரையை கடக்க தொடங்கியது. காலை 11 மணிக்கு முழுமையாக இந்த புயல் கரையை கடக்கும். இதனால் ஒடிசாவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.
மிக மோசம்
இந்தியாவில் இதுவரை கடந்த 43 வருடங்களில் இது போல வலுவான புயல் வீசியது இல்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயல் ஆந்திர பிரதேசம் முதல் ஒடிசா வரை தாக்குகிறது. அதேபோல் ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகாரில் புயல் மோசமாக தாக்குகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், வங்கதேசத்தின் எல்லை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட போவது ஒடிசாதான்.
மக்கள் மாற்றம்
இந்த புயல் செல்லும் பகுதியில் மட்டும் சுமார் 10 கோடி மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த புயலில் இருந்து பாதுகாப்பதற்காக இதுவரை 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஒடிசாவில் இருந்து மட்டுமே 8 லட்சம் பேர் வரை வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.