மும்பையில் ஸ்ரீதேவியின் உடலுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி
Recommended Video
மும்பை: துபாயில் உயிரிழந்து மும்பை கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் எம்பாமிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் அந்தேரியில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திரை உலக பிரபலங்கள் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.