For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் 6வது நாளாக போராட்டம்.. துடைப்பத்தால் அடித்துகொண்ட தமிழக விவசாயிகள்!

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்தில் தங்களைத் தானே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Farmers marched with half nude and hitting themselves with a broom stick

அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் தங்கள் தலையில் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்நிலையில் ஆறாவது நாளான இன்று விவசாயிகள் தங்களைத் தானே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

English summary
Tamil farmers protest continues as 6th day in Delhi. Farmers marched with half nude and hitting themselves with a broom stick.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X