வாட்டியெடுத்த தனிமை.. தவித்த இளம் விதவை.. மாமனாரையே கல்யாணம் முடித்த மருமகள்.. வைரல் நியூஸ்
விதவை மருமகளை மாமனார் திருமணம் செய்து கொண்டுள்ளார்
ராய்ப்பூர்: கணவனை இழந்து 2 வருட தனிமையில் தவித்த மருமகள், மாமனாரையே கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் ஆர்த்தி சிங்... 21 வயது இளம்பெண்.. 2 வருடத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது.. ஆனால், எதிர்பாராதவிதமாக கணவன் இழந்துவிட்டார்.
இதனால் அவரது திருமண வாழ்வே நொறுங்கி போனது.. பல இன்னல்களை சந்திக்க ஆரம்பித்தார்.. திடீரென கணவர் இறந்துவிட்டதால், என்ன செய்வது எனத் தெரியாமல், ஆர்த்தி தவித்து தனிமையில் தவித்துள்ளார்.
கோவையில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
மாமனார்
இந்நிலையில் ஆர்த்திக்கு அவரது மாமனார்தான் சப்போர்ட்டாக இருந்ததாக கூறப்படுகிறது.. அவரது பெயர் கிருஷ்ணா ராஜ்புத் சிங்.. இவர் மருமகளை நன்றாக கவனித்து வந்துள்ளார்.. ஒருகட்டத்தில் மாமனாரையே திருமணம் செய்ய மருமகள் முடிவு செய்தார்.
திருமணம்
ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பில் இதை பற்றி சொல்லப்பட்டது.. கணவர் இறந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மறுமணத்திற்குச் சாதிய அமைப்பினரும் சம்மதம் சொன்னார்கள்.. இவர்கள் தலைமையிலேயே இந்த திருமணம் நடந்துள்ளது... ஆனால், ஆர்த்தியின் குடும்பத்தினருக்கு இந்த செயல் கடுமையான ஷாக்கை தந்துள்ளது.
கல்யாணம்
இதை பற்றி ஆர்த்தி சொல்லும்போது, "நான் நிறைய கஷ்டத்தை அனுபவிச்சேன்.. என் மாமனார்தான் எனக்கு உதவியா இருந்தார்.. அன்பா என்னை பார்த்துக்கிட்டார்.. அதனால அவரையே கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
வைரல் நியூஸ்
தற்போது அந்த மாநிலமும் லாக்டவுனில் உள்ளதால், அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினரே இந்த கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் படுவேகமாக பரவி வருகிறது.. ஏராளமானோர் இந்த செயலுக்கு தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மாமனாரே மருமகளுக்கு வாழ்வளித்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.