விமானத்தில் பக்கத்து சீட்டில் இருந்த பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: 50 வயது நபர் கைது
கொல்கத்தா: டெல்லியில் இருந்து இன்று காலை கொல்கத்தாவுக்கு கிளம்பிய இன்டிகோ விமானத்தில் பெண் பயணிக்கு செக்ஸ் தொல்லை அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் ஒன்று இன்று காலை பயணிகளுடன் கொல்கத்தாவுக்கு கிளம்பியது. விமானத்தில் இருந்த டெல்லியைச் சேர்ந்த சஞ்சய் கனாட்(50) என்பவர் தனக்கு அருகே அமர்ந்திருந்த பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை அளித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் விமானம் நடுவானில் பறக்கையில் இது குறித்து விமான சிப்பந்திகளிடம் புகார் அளித்தார். விமானம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமான நிலைய காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சயை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பாலியல் புகார் தெரிவித்த பெண்ணும் டெல்லியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.