இந்தியா சிறந்த நண்பரை இழந்துவிட்டது.. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரணாப், மோடி, சோனியா இரங்கல்
பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ 90 வயதில் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பரை இழந்து விட்டோம் என்று பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி
புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு குடியரத்சு தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறந்த நண்பராக பிடல் காஸ்ட்ரோ விளங்கினார் என பிரணாப் புகழாரம் சூட்டியுள்ளார்.
மோடி இரங்கல்
Fidel Castro was one of the most iconic personalities of the 20th century. India mourns the loss of a great friend.
— Narendra Modi (@narendramodi) November 26, 2016
பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவரக்ள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிடல் காஸ்டோர மறைவுக்கு தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
I extend my deepest condolences to the Government & people of Cuba on the sad demise of Fidel Castro. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) November 26, 2016
பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
We stand in support with the Cuban Government and people in this tragic hour.
— Narendra Modi (@narendramodi) November 26, 2016
இந்த துக்கமான நேரத்தில் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா துணை நிற்கும். 20 ஆம் நூற்றாண்டின் மாமனிதர்களில் பிடல் காஸ்ட்ரோவும் ஒருவர். இந்தியா தனது உற்ற நண்பனை இழந்து தவிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சோனியாகாந்தி இரங்கல்
பிடல் காஸ்ட்ரோவின் மறைவு கியூபாவுக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, இந்திய மக்களின் இதயங்களில் பிடல் காஸ்ட்ரோ என்றும் உயிர்ப்புடன் இருப்பார் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி
ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மேலும் சமூகத்தின் தூண்டுகோலாக விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ என சீதாராம் யெச்சூரி புகழாரம் சூட்டியுள்ளார்.