நாய் ஆனாலும் நானும் தாய் தானே.. ஒரு உணர்ச்சி மிகு போராட்டம்
குட்டிகளை காக்க நாகப்பாம்புடன் நாய் சண்டையிட்டகாட்சி வைரலாகி வருகிறது.
Recommended Video
ஒடிசா: தன் குட்டிகளை பாம்பிடம் இருந்து மீட்க ஒரு நாய் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல!!
எங்கே பாம்பு தன் குட்டிகளை கொன்றுவிடுமோ என்று ஒரு நிமிடமும் துடித்த துடிப்பு வீடியோவாக வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் பத்ரக் நகரில் உள்ள அந்தப் பகுதியில், ஒருவர் நாய் வளர்த்து வருகிறார்.
7 குட்டிகள்
அந்த நாய்க்கு வீட்டின் மாடிப்படிக்கு கீழேயே இடமும் ஒதுக்கி உள்ளார். சமீபத்தில் இந்த 7 நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த 7 குட்டிகளையும் கவனமாக பராமரித்து வந்தது.
நாகப்பாம்பு நுழைந்தது
இரை தேட வெளியே போனால் கூட சரி, அவ்வப்போது தன் குட்டிகள் மீது இந்த நாய்க்கு ஒரு கவனம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் அந்த வீட்டுக்குள் ஒரு நாகப்பாம்பு புகுந்துவிட்டது.
நாகப்பாம்புடன் சண்டை
குட்டிகள் இருக்கும் இடத்துக்கும் அந்த நாகப்பாம்பு வந்துவிட்டது. இதை கவனித்துவிட்ட தாய் நாய், 7 குட்டிகளை பாதுகாக்க அல்லாடியது. அவ்வளவு பெரிய நாகப்பாம்புடன் குட்டிகளை காக்க ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே சண்டை போட்டது. நாயின் இந்த அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அனைவரும் ஓடிவந்துவிட்டார்கள்.
தாய்மையே ஜெயிக்கும்
நாயின் பாசப் போராட்டத்தையும் வீடியோவாக எடுத்து நெகிழ்ந்தார்கள். ஆனாலும் பாருங்கள், எவ்வளவுதான் தாய் நாய் போராடினாலும், அந்த நாகப்பாம்பு கடைசியில் 2 குட்டிகளை கொன்று விட்டுத்தான் போயிருக்கிறது. ரூபங்கள் எதுவானால் என்ன? தாய்மையே இறுதியில் பேசப்படுகிறது.