காஷ்மீரில் ராணுவத்தினர், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
காஷ்மீர் மாநிலம் ஷோபியன் பகுதியில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே தீவிரமான துப்பாக்கிச்சண்டைநடைபெற்று உள்ளது.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் ஷோபியன் பகுதியில் ராணுவம் மற்றும் லஷ்கர் தீவிரவாதிகள் இடையே தீவிரமான துப்பாக்கிச்சண்டை நடைபெற்று இருக்கிறது. இருவருக்கும் இடையில் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் ஷோபியன், புல்வாமா, பார்திபோரா, மற்றும் கனவ்போரா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.
இன்று அதிகாலை ஷோபியன் பகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் அங்கு இந்த தேடுதல் நடத்தப்பட்டது.
ராணுவத்தின் தேடுதலின் போது அங்கு பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 3 மணி நேரம் நடந்தது.
இந்த தாக்குதலில் ராணுவத்தின் தரப்பில் எந்த மரணமும் நிகழவில்லை. அதேபோல் எந்த தீவிரவாதியும் கொல்லப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. உடலில் காயங்களுடன் தீவிரவாதிகள் தப்பித்து சென்று உள்ளனர்.