For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல்.. 3 பொதுமக்கள் படுகாயம்
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா, அவந்திபோரா, உரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு அடிக்கடி தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு ராணுவ தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 பொதுமக்கள் படுகாயம். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
Comments
English summary
Fight breaks in JK between Pakistan and Indian forces. 3 civilians injured in the heavy firing in Uri Sector, they are being taken to hospital.
Story first published: Monday, February 19, 2018, 21:01 [IST]