கொல்கத்தா ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து.. சிக்கிய மக்கள்.. காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
Recommended Video
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்கு தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொல்கத்தா நகரின், சால்ட் லேக், என்ற பகுதியில் பல அடுக்கு உயரம் கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று மாலை திடீரென பயங்கர சத்தம் கேட்டது.
இதனையடுத்து தரைப்பகுதியில் மளமளவென தீப்பிடித்து பரவத்தொடங்கியது. தரைப்பகுதியில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியேறியதை, பார்க்கமுடிந்தது.
தகவலறிந்ததும் மொத்தம் 9 வாகனங்களில் விரைந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வணிக வளாகத்திற்குள் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை.
Kolkata: Fire breaks out at Baishakhi mall, Salt Lake. Three fire tenders have been rushed to the spot. More details awaited. #WestBengal pic.twitter.com/raE0RHO3YW
— ANI (@ANI) October 3, 2019
உள்ளே சிக்கியுள்ள பொதுமக்களையும், வணிகர்களையும் காப்பாற்றுவதற்கு தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தரைப்பகுதியில், உள்ள பகுதியில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவை பலவற்றிலும் தீ பரவி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது