சீரம் இன்ஸ்ட்டியூட் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.
https://twitter.com/ANI/status/1352191232349409280
தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ரசெனகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.
இந்தியா மட்டும் அல்லாது பல நாடுகளும் இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளையே சார்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன?
- திருக்குறள் மீது சிறுவயதில் எழுந்த ஆர்வம்; ஓலைச்சுவடியில் எழுதும் பஞ்சாபியர் ஜஸ்வந்த் சிங்
- சசிகலாவுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்றா? எப்போது டிஸ்சார்ஜ்? டாக்டர் பேட்டி
- ரெய்னா உள்ளே, கேதர் வெளியே: ஐபிஎல் 2021 சீசனில் விடுவிக்கப்பட்டவர்கள் யார் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்