தீபிகா படுகோனே தங்கியுள்ள குடியிருப்பில் தீவிபத்து.. மக்கள் பதறியடித்து கொண்டு ஓட்டம்
தீபிகா படுகோனே தங்கியுள்ள குடியிருப்பில் தீவிபத்து நிகழ்ந்துள்ளது.
Recommended Video
மும்பை: தீபிகா படுகோனே தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
மும்பை வோர்லி பகுதியில் முக்கோண வடிவத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் பெயர் பியூமவுண்ட். ஒரு கட்டடம் முக்கோண வடிவிலும், மற்றொரு கட்டடம் தலைகீழ் முக்கோண வடிவிலும் இருக்கும்.
இங்கு நடிகை தீபிகா படுகோனே வீடு வாங்கிக் கொண்டு குடியிருக்கிறார். மிக சொகுசு வசதிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அனைத்து இடங்களிலும் பரவியது.
மொத்தம் 25 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் பி பிளாக்கில் மேல் தளத்தில் தீபிடித்தக் கொண்டது.இதனால் தீயை அணைக்க சிரமமாக உள்ளது. தீ வேகமாக பரவுவதால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
Fire at Beaumonde building in Worli area , its the same building where
— RJ ALOK (@OYERJALOK) June 13, 2018
Deepika Padukone and other B town celebes resides . FIRE on 32 -33 floors, Deepika stays at 26th Floor.
No Casualties yet, @deepikapadukone is shooting for her brands . #RjAlok pic.twitter.com/eIhfkXDQvK
அங்குள்ள குடியிருப்புவாசிகளை தீயணைப்பு வீரர்கள் வேகமாக அகற்றி வருகின்றனர். தீவிபத்தால் அப்பகுதியே பரபரப்பாக உள்ளது. தீபிகா வீடும் அந்த கட்டடத்தில் உள்ளதால் அவரது ரசிகர்களும் அந்த இடத்தில் கூடியுள்ளனர்.