For Daily Alerts
Just In
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் மேற்குப் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பிதம்பூரா வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் 20 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த தீவிபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
தீ விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை.
Comments
English summary
A fire broke out at the Pearls Business Park building in Pitampura area of Delhi, media reports said.
Story first published: Sunday, April 24, 2016, 18:09 [IST]