For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவியல் குவியலாக புதையல் கண்டெடுக்கப்பட்ட பத்நாபசுவாமி கோவிலில் தீ விபத்து... 2 பேர் படுகாயம்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவில்லில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறையில் குவியல் குவியலாக தங்க, வைர, வைடூரிய நகைகள் இருந்தது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கோவிலுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் இருந்த கோவிலின் நிர்வாகம் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவினரிடம் உள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

பத்மநாபசுவாமி கோவிலில் தீ விபத்து

பத்மநாபசுவாமி கோவிலில் தீ விபத்து

இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் கரும்புகை கிளம்பியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

விரைந்த தீயணைப்புத்துறையினர்

விரைந்த தீயணைப்புத்துறையினர்

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவனந்தபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவில் பாதுகாவலர்களும் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் படுகாயம்

2 பேர் படுகாயம்

இதனால் தீ கட்டுப்படுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் கோவில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்டோர் ரூமில் தீ விபத்து

ஸ்டோர் ரூமில் தீ விபத்து

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர். வடக்கு வாசல் பகுதியில் பழைய பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் தீப்பிடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மக்கள் திரண்டதால் பரபரப்பு

மக்கள் திரண்டதால் பரபரப்பு

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து பற்றி தெரிய வந்ததும், ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Fire broke out in the Padmanabhaswamy temple early hours of today. In this incident 2 people injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X