ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. அவசரமாக இறக்கிவிடப்பட்ட பயணிகள்
புவனேஸ்வர்: டெல்லியிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.
இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், கந்தபடா ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டி உடனடியாக பிற பெட்டிகளில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, அதில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே மற்றும் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த ரயில் விபத்து காரணமாக, அந்த மார்க்கத்தில் இயங்கக்கூடிய பல ரயில்கள் தாமதமாகின. மும்பை மார்க்கத்திற்கு செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Fire broke out in the power car of New Delhi-Bhubaneswar Rajdhani Express near Khantapada, Odisha. The fire has been brought under control and no casualties or injuries have been reported. As safety measure generator car has been detached. pic.twitter.com/stMB9yz5uf
— ANI (@ANI) May 11, 2019