For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உபி அனல் மின்நிலைய பாய்லர் வெடிப்பு – 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்திரபிரதேசத்தில் அனல் மின் நிலைய பாய்லர் வெடித்துச் சிதறியதில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகர் மாவட்ட தலைநகர் அலிகரில் இருந்து சுமார் 15 கலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காசிம்பூர் பகுதியில் ஹர்டுவாகஞ்ச் அனல் மின் நிலையம் உள்ளது.

Five killed, 7 injured as boiler explodes in packaging factory

இன்று காலை வழக்கம் போல் இங்கு பணியாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோது இங்குள்ள கொதிகலன்களில் ஒன்று பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.

அருகாமையில் இருந்த தொழிலாளர்களின் மீது கொதிகலனில் இருந்து தெறித்த திரவம் கொட்டியதால் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்த 7 பேர் அலிகரில் உள்ள நேரு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அனல் மின் நிலைய வாசலில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Five workers were killed on the spot while seven others sustained severe injuries after a boiler in Alpha packaging factory at Silvassa (Union Territory) exploded on Wednesday afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X