For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

8 நாட்களுக்கு பிறகு கொச்சிக்கு மீண்டும் தொடங்கியது விமான சேவை!

கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிபோட்ட கேரள மாநிலம் கொச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

கொச்சி: கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிபோட்ட கேரள மாநிலம் கொச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரள மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

Flight service started in Kochi after 8 day

வெள்ளப்பெருக்கு நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 400 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் மண்சரிவில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.

கொச்சி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்ததால் வரும் 26 ஆம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொச்சி விமான நிலையத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. கொச்சி கடற்படை விமானதளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கியது.

8 நாட்களுக்கு பிறகு கேரள மாநிலம் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Flight service has been started in Kochi after 8 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X