For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா வெள்ளம்: மனது உடைகிறது.. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. பினராயி விஜயன் உருக்கம்

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மனதை உடைக்கிறது, இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மனதை உடைக்கிறது, இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவை வெள்ளம் சூழ்ந்துள்ளது.இரண்டு நாட்களாக அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இடுக்கி, கோழிக்கோடு, கொச்சி தொடங்கி எல்லாம் மாவட்டங்களும் மொத்தமாக நீரில் மூழ்கி உள்ளது. கடந்த மாதம் தொடங்கிய மழை விடாது அங்கே பெய்து வருகிறது.

நிலைமையை கொண்டு வர முடியவில்லை

தற்போது அங்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் இறங்கி இருக்கிறார்கள். 25 ஹெலிகாப்டர்கள் அங்கே மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் இன்னும் நிறைய மீட்பு குழுக்கள் அங்கே வர உள்ளது. ஆனாலும் இன்னும் அங்கே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

மிக மிக மோசம்

இந்த வெள்ளத்தால், 30000 க்கும் அதிகமான மக்கள் இடமாற்றப்பட்டு இருக்கிறார்கள். 25000 மக்களை மீட்பு பணியினரால் தொடர்பு கொள்ள முடியாது தூரத்தில் இருக்கிறார்கள். 2500க்கும் அதிகமான கட்டிடங்கள் 24 மணி நேரத்தில் இடிந்து விழுந்து இருக்கிறது.

வருத்தம் தெரிவித்தார்

அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த நிகழ்வால் பெரிய அளவில் உடைந்து போய் உள்ளார் . ஆனாலும் மீட்பு பணியை சிறப்பாக செய்து வருகிறார். இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று நினைக்கவில்லை, மனது உடைகிறது என்று மிகவும் வருத்தமாக இந்த வெள்ளம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இறங்கினார்

தற்போது கேரளாவில் உள்ள அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் இந்த மீட்பு பணியில் இறங்கும்படி அவர் ஆணையிட்டுள்ளார். நேற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சில இடங்களை இவர் நேரில் சந்தித்தார். இன்று மீண்டும் அவர் நேரடியாக மீட்பு பணி நடக்கும் இடத்திற்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

 உடைய வைக்கும் காட்சிகள்

உடைய வைக்கும் காட்சிகள்

இந்த வெள்ளம் குறித்து மனதை உடைய வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

[மூழ்கியது கேரளா.. பல இடங்களில் வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்]

 பெரிய அழிவு

பெரிய அழிவு

கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

[வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவு.. உடையும் வீடுகள்.. வெள்ளத்தில் மக்கள்.. என்ன நடக்கிறது கேரளாவில்?]

English summary
Flood In Kerala: CM Pinarayi Vijayan mourns for the worst disaster. Rain lashes each and everything, Heart Breaking Video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X