கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. குமாரசாமி ஆட்சி கவிழுமா?.. தப்புமா?
டெல்லி: கர்நாடக சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதில் குமாரசாமி ஆட்சி கவிழுமா, இல்லை தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சுமார் 15 மாத கால ஆட்சியில் முக்கிய இலாகா, அமைச்சர் பதவி ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது! மாஸ் பிளான்
காரசார விவாதங்கள்
எனினும் சபாநாயகர் இவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை. இதனால் 15 எம்எல்ஏக்களும் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் காரசார விவாதங்கள் நடைபெற்றன.
ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
அப்போதே சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இன்றைய தினத்துக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
சபாநாயகர்
இந்த நிலையில் இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜினாமா கடிதம் மீது முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது.
ரஞ்சன் கோகாய்
அது போல் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என பரபரப்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது. நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமியின் ஆட்சி தப்புமா இல்லை கவிழுமா என்பது குறித்து நாளை தெரியவரும்.