மத்திய பட்ஜெட்டில் எந்த புதிய யோசனையும் இல்லை - ப. சிதம்பரம்
டெல்லி: பாஜக கூட்டணியின் கொள்கைகள் போன்றே மத்திய பட்ஜெட் உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய யோசனைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், இதுவரை இல்லாத அளவிற்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் மீதான உற்பத்தி வரியால் வருவாய் உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் வரியால் அதிகரிக்கவில்லை என்றார்.
உணவு உற்பத்தியை அதிகரிப்பது தொடார்பான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பா.ஜ.க. கூட்டணியின் கொள்கைகள் போன்றே அவர்களின் பட்ஜெட்டும் உள்ளது. ஏற்றுமதி தொடர்பாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்கள் பின்பற்றப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பாஜக கூட்டணியின் கொள்கைகள் போன்றே உள்ளது பட்ஜெட், தனியார்துறை, ஊரக பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதிக்கு கவனம் செலுத்தவில்லை,
வரிகளில் பெரும்பாலும் கச்சா எண்ணெய் மூலமாகவே வந்துள்ளன என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.