குஜராத் முன்னாள் முதல்வர்... மாதவ் சிங் சோலங்கி காலமானார்... மோடி, ராகுல்காந்தி இரங்கல்!
ஆமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குஜராத் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93. குஜராத் காந்திநகரில் உள்ள இல்லத்தில் மாதவ் சிங் சோலங்கியின் உயிர் பிரிந்தது.
சோலங்கி 1976-ல் முதன் முதலாக குஜராத் முதல்வராக பதவிஏற்றார். குஜராத்தில் நான்கு முறை முதல்வராக பணியாற்றிய அவர் நரேந்திர மோடிக்கு பிறகு அந்த மாநிலத்தில் அதிக முறை முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மாதவ் சிங் சோலங்கி 1991-92'ல் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். குஜராத் சார்பாக மாநிலங்களவைக்கு இரண்டு முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது மகன் பரத்சிங் சோலங்கியும் முன்னாள் மத்திய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவ் சிங் சோலங்கியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.