For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோர்ட்டில் ஆஜராக வந்த மாஜி எம்.எல்.ஏ. மீது வெடிகுண்டு வீச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பைசாபாத்: உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. சோனு சிங் மற்றும் அவரது சகோதரர் மோனு சிங் மீதான கொலை வழக்கு விசாரணை இன்று பைசாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் மோனு சிங் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது உள்ளே புகுந்த மர்ம ஆசாமி, திடீரென மோனு சிங் மற்றும் பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் துப்பாக்கி நபர் மற்றும் ஒருவர் இறந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதல் நடந்தபோது நீதிமன்ற வளாகத்திற்குள் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. அப்படி வீசப்பட்ட மூன்று குண்டுகளை போலீசார் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A BJP leader from Sultanpur in Uttar Pradesh and his brother were attacked with crude bombs at a court in Faizabad district today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X