வாஜ்பாய் உடல் நிலை ஸ்திரமாக உள்ளது: எய்ம்ஸ்
Recommended Video
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது என்று, அவர் சிகிச்சை பெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
உடல் நல பிரச்சினைகளால் நீண்டகாலமாக தீவிர ஓய்வில் இருந்து வருபவர் வாஜ்பாய். இந்த நிலையில், நேற்று அவருக்கு நோய் தொற்று தீவிரமானதால், டெல்லியிலுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் இன்ட்ஸ்ட்டிடியூட் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, வைகோ உள்ளிட்ட பல தலைவர்களும், வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனிடையே, எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வாஜ்பாய் உடல்நலம் ஸ்திரமாக உள்ளது. ஆன்டிபயோடிக்ஸ் மருந்துகளை உடல் ஏற்றுக்கொள்கிறது. ஊசி மூலமாக அவ்வகை மருந்துகள் வாஜ்பாய்க்கு செலுத்தப்படுகின்றன. அனைத்து வகை செக்அப்புகளும் திருப்திகரமாக உள்ளது. இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் வாஜ்பாய் சிகிச்சை பெறுவார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.