For Daily Alerts
Just In
ஜார்க்கண்ட் - நிலக்கரிச் சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் சிக்கினர் - 4 பேர் பலி
எஞ்சியர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள நிர்ஸா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் பணியில் இருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் தொழிலாளர்கள் அத்தனை பேரும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கியுள்ளன.
Comments
English summary
Over 50 miners at a coal mine in Nirsa in Dhanbad got trapped on Monday after its roof collapsed. According to Times Now, four people have died. Rescue teams have rushed to the spot. More details awaited.
Story first published: Monday, November 11, 2013, 16:40 [IST]