For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டிஸ்கரில் பரபரப்பு... பெண் மாவோயிடுகள் 4 பேர் சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

ராய்பூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் பெண் மாவோயிஸ்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா - தண்டேவாடா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் கூட்டாக இணைந்து நக்சலைட்டுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

 Four women Maoists killed in Chhattisgarh

இந்நிலையில் மாலங்கிர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் கூடாரம் அமைத்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து கூட்டுப்படையினர் அங்கு விரைந்தனர். அப்போது அவர்களின் கூடாரங்கள் மீது கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், 4 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த பகுதியின் முக்கியத் தலைவி குண்டு அடிப்பட்டு காயங்களுடன் தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கூட்டுப்படையினர் அங்கு இருந்த 303 துப்பாக்கிகளையும், 12 அதிநவீன துப்பாக்கிகளையும் கைப்பற்றினர். மாலங்கிர் பகுதியில் மறைந்திருந்த 10 மாவோயிடுகளில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தப்பியோடிய மேலும் 6 பேரை கூட்டுப்படையினரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

English summary
Chhattisgarh police gunned down 4 Women Maoist at their Malangir camp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X