For Daily Alerts
Just In
காஷ்மீரின் லடாக் ஏரியில் ஊடுவிய சீன ராணுவம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் ஏரியில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காஷ்மீரின் லடாக் ஏரியில் இந்திய பகுதிக்குள் சீனா ஊடுவியதாக கூறப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரியானது இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் உரியது. இருப்பினும் இதன் பெரும்பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் ஏரியின் இந்திய பகுதிக்குள் சீன படகுகள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி இருக்கின்றன.
இதற்கு இந்திய ராணுவத்தின் ரோந்து படகுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததும் சீன ராணுவத்தினர் தங்கள் படகுகளில் திரும்பி சென்றனர்.
Comments
English summary
There are reports of a fresh Chinese incursion into the Indian territory in Ladakh. As per a report in a leading English daily, Chinese troops entered the Indian side of the Pangong lake in eastern Ladakh earlier this week.
Story first published: Saturday, June 28, 2014, 13:49 [IST]