ஆர்.பி.ஐ தலையிட்டும் சீராகவில்லை.. இந்திய ரூபாய் மதிப்பில் மாபெரும் சரிவு.. தற்போதைய மதிப்பு என்ன?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொஞ்சம் சீராக இருந்த ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இது தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இந்திய ரூபாய் , இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது. இது நமது பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்க உள்ளது.
வீழ்ச்சியோ வீழ்ச்சி
ஒரு மாதம் முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. அப்போதே ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரியும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் இரன்டு வாரம் முன் இந்திய ரூபாய் மதிப்பு மோசமான நிலையை அடைந்தது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி 72 ரூபாய் ஆனது.
[நெருக்கடி அதிகமானா ஒருத்தன் வருவான்.. அவன் சர்க்கார் வேறமாதிரி இருக்கும்.. மெர்சலாக்கிய விஜய்! ]
அடுத்தடுத்து ஏற்பட்ட சரிவு
அதற்கு மறுநாள் செப்டம்பர் 6ம் தேதி 72.10 ரூபாயை தாண்டியது. அன்றுதான் முதல்முறை 72 ரூபாயை தாண்டியது இந்திய ரூபாய் மதிப்பு. சில நாட்கள் கழித்து செப்டம்பர் 9ம் தேதி 33 பைசா வீழ்ச்சி அடைந்து, இந்திய ரூபாய் மதிப்பு 72.33 ரூபாய் ஆகியது. தற்போது இதில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய மதிப்பு என்ன
தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.34 ரூபாய் ஆகி உள்ளது. முதல்முறை 73 ரூபாயை தாண்டி இருக்கிறது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று மட்டும் 33 பைசாக்கள் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.
ஆர்பிஐ தலையிட்டும்
ரூபாய் வீழ்ச்சியில் ஆர்பிஐ தலையிட்டும் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. தன்னிடம் உள்ள குறிப்பிட்ட மதிப்பிலான டாலரை சந்தைக்கு விட்டும் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. இதனால் விரைவில் இந்த மதிப்பு 80 ரூபாயை அடையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.